ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) சுற்றுப்புற மோசடியைத் தடுக்கும் வகையில் தனது உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. EPFO, UAN (Universal Account Number), ஆதார் எண், PAN எண், வங்கி விவரங்கள், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP), மற்றும் கடவுச்சொற்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக கேட்காது என்று முறையான எச்சரிக்கை அளித்துள்ளது.
மோசடி செய்பவர்கள், தாங்கள் EPFO-வின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு, “உங்கள் KYC புதுப்பிக்கப்பட வேண்டும்,” அல்லது “உங்கள் PF தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,” போன்ற காரணங்களைக் கூறி உங்களைத் தொடர்புகொள்ள முயற்சிப்பார்கள். இவ்விதமான முயற்சிகள் மூலம் அவர்கள் உங்கள் வங்கி மற்றும் தனிப்பட்ட தகவல்களை பெற்றுக்கொண்டு, PF தொகையைத் திருடவோ, வங்கிக் கணக்கை காலி செய்வதற்கோ முயல்கிறார்கள்.
ஒவ்வொரு EPFO உறுப்பினரும் பின்வரும் தகவல்களை யாருடனும் எந்த விதத்திலும் பகிரக் கூடாது:
- UAN (Universal Account Number)
- ஆதார் எண்
- PAN எண்
- வங்கி கணக்கு விவரங்கள் (கணக்கு எண், IFSC குறியீடு)
- OTP (One Time Password)
- Login Passwords
மோசடி முயற்சி நடந்தால் என்ன செய்யவேண்டும்?
ஆன்லைன் மோசடிக்கு, உடனடியாக சைபர் கிரைம் பிரிவுவில் புகார் செய்யுங்கள்.
சந்தேகங்களுக்கு, EPFO-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் (epfindia.gov.in) அல்லது உமாங் (UMANG) செயலியின் மூலம் மட்டுமே உங்கள் கணக்கு விவரங்களை சரிபார்க்கவும்.
மத்திய அரசு நிறுவனங்கள் ஒருபோதும் தனிப்பட்ட தகவல்களை நேரடியாக கேட்காது என்பதை மனதில் வைத்திருங்கள். கவனத்துடன் செயல்பட்டு, உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
