இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு பள்ளி வளாகத்திற்குள் உள்ள ஒரு மசூதியில் இன்று (வெள்ளிக்கிழமை) தொழுகையின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 54 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
