தங்க நகைக் கடன் பெறுவது போல, வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் வைத்து கடன் பெறலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே தங்கத்தைப் போலவே இனி மக்கள் வெள்ளியையும் உடனடி நிதித் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் கலாசாரத்தில் தங்க நகைகளுக்கும், தங்க சேமிப்பும் தொடர்ந்து வரும் நிலையில், இனி அதனுடன் வெள்ளியும் இணைந்து கொள்ளும். இனி அவசரத் தேவைக்கு வெள்ளி நகைகள் உதவும் என்ற நிலை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
