சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்பட 5 இடங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தை புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
