கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து விலையானது உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது, கத்திரிக்காய் விலை எப்போதும் 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனையாகும், ஆனால் தற்போது 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல வெண்டைக்காய், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
அதே சமயத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தக்காளி விலையானது அதிகரித்திருந்து. ஒரு கிலோ 60 ரூபாயை தாண்டியது. இந்த நிலையில் தக்காளி விலை தற்போது சற்று குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 30 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை போலவே வெங்காயத்தின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விலை நிலவரத்தை தற்போது பார்க்கலாம்!!
பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்,
சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்,
தக்காளி ஒரு கிலோ 15 முதல் 30 ரூபாய்க்கும்,
பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்,
பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்,
உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும்,
குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்,
சுரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்,
பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்,
அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்,
முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 ரூபாய்,
கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்,
காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்,
கொத்தவரை ஒரு கிலோ 65 ரூபாய்,
முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்,
கத்திரிக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்,
பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்,
இஞ்சி ஒரு கிலோ 70 ரூபாய்,
வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்,
முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்,
பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்,
புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
