வங்கதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, மேலும் ஏதேனும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டதா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
