Tuesday, October 7, 2025

மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் மற்றும் பெங்களூரு ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16327) வருகிற 11-ந் தேதி கொல்லம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (16328) வருகிற 12-ந் தேதி கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு வழக்கமான நேரத்தில் மதுரைக்கு புறப்படும்.

மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (20671) வருகிற 12-ந் தேதி கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் செல்வதற்கு பதிலாக எஸ்.எம்.வி.பி. பெங்களூரு ரயில் நிலையம் செல்லும்.

மறுமார்க்கத்தில் இந்த ரயில் அன்றைய தினம் எஸ்.எம்.வி.பி. பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம் வழியாக மதுரை வந்து சேரும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News