கடந்த 27ஆம் தேதி சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சுழலில், கரூர் துயரம் குறித்து தவெக தலைவர் விஜய் முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.