தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினர்

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, தியாகி இமானுவேல் சேகரனின் 68வது நினைவு தினத்தை ஒட்டி, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Related News

Latest News