Friday, August 29, 2025
HTML tutorial

குரூப் 1 தேர்வு எழுதியவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை ஆட்சியர், DSP., வணிக வரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் என உள்பட குரூப்-1 பணியிடங்களில் 70 காலியிடங்களும், குரூப்-1ஏ பணியிடங்களில் உதவி வனப் பாதுகாவலர் பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்ததாக தெரிவித்தனர். இதற்காக மாநிலம் முழுவதும் 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 987 தலைமைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் தேர்வின் முடிவை பார்க்கலாம்.

முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 1 முதல் 4ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வு நடைபெறும் என TNPSC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News