Tuesday, August 26, 2025
HTML tutorial

விஜய் பவுன்சர்கள் மீது தவெக தொண்டர் புகார்

மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு 21-ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் கட்சி தொண்டர்களை சந்திப்பதற்காக இந்த ரேம்ப் வாக் மேடையானது போடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த முறை தொண்டர்கள் அந்த ரேம்ப் வாக்கில் ஏறிவிடக்கூடாது என்பதற்காக மாநாடு தொடங்கும் முன்பேர் ரேம்ப் வாக்கின் இருபுறமும் கிரீஸ் தடவப்பட்டது. ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய் ரேம்ப் வாக் சென்றபோது அவரது ரசிகர்கள், பவுன்சர்ஸ்களையும் தாண்டி மேடையில் ஏறிக் குதித்து விஜய் அருகே நெருங்கி வந்தனர்.

அவர்களை தடுத்த பவுன்சர்கள் குண்டுக் கட்டாக மேடையில் இருந்து தூக்கி எறிந்தனர். இதனால் அந்த ரசிகர் காலில் முறிவு ஏற்பட்டது. இந்த நிலையில் பெரம்பலூர் காவல் நிலையத்தில் விஜய் ரசிகர் ஒருவர், ரேம்ப்வாக்கில் விஜய்யை சந்திக்க சென்றபோது அவரது ரசிகர்கள் தூக்கி கீழே போட்டதாக புகார் கூறியுள்ளார்.

விஜய்யின் பவுன்சர்கள் தன்னை குண்டுக்கட்டாக தூக்கி போட்டதாகவும், விஜய்யின் பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News