Monday, August 18, 2025
HTML tutorial

அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய 96 பேர் மீது வழக்குப்பதிவு

தமிழகத்​தில் முக்​கிய ரயில் நிலை​ய​மாக சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யம் உள்ளது. இங்கு நாள்​தோறும் 100-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​கள் வந்து செல்​கின்​றன. இந்த ரயில் நிலை​யத்​தில் இயக்​கப்​படும் ரயில்​களில் விதி​மீறலில் ஈடு​படு​வோர் மீது ரயில்வே பாது​காப்​பு படை​யினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தில் கடந்த 7 மாதங்​களில் தேவை​யின்றி அபாயச் சங்​கி​லியை இழுத்து நிறுத்​தி​ய​தாக 96 பேர் மீது ரயில்வே பாது​காப்​புப் பிரி​வினர் வழக்​கு பதிந்​துள்​ளனர்.

நடப்​பாண்​டில் ஜனவரி முதல் ஜூலை வரை 96 பேர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்டு நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி, அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த 2023-ல் 210 பேர் மீதும், 2024-ல் 217 பேர் மீதும் வழக்​கு​கள் பதி​யப்​பட்​டு, அபராத​மும்​ வி​திக்​கப்​பட்​டுள்​ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News