கொழும்பு ஹங்வெல்ல துன்னான பகுதியில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ஒரு வீட்டில் இருந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த நபர், அவிசாவளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஹங்வெல்ல போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.