Thursday, August 14, 2025
HTML tutorial

சிந்து நதி நீர் ஒப்பந்த ரத்து விவகாரம் : இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் பிரதமர்

சிந்து நதி நீர் ஒப்பந்த ரத்து விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், பாகிஸ்தான் முன்னாள் மந்திரி பிலாவல் பூட்டோ ஆகியோர் மிரட்டல் விடுத்து இருந்தனர்.

இதுதொடர்பாக, இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசியதாவது: எங்கள் தண்ணீரைத் தடுத்து நிறுத்துவதாக அச்சுறுத்தினால், பாகிஸ்தானின் தண்ணீரை ஒரு சொட்டு கூட உங்களால் பறிக்க முடியாது என்பதை எதிரியிடம் நான் சொல்ல விரும்புகிறேன்.

இதுபோன்ற செயலை இந்தியா செய்ய முயற்சித்தால் மீண்டும் ஒரு பாடம் கற்பிக்கப்படும் என தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News