சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்கொணர்வு வழக்கில் விசாரணைக்கு ஆஜரான அவரை, பெண்கள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டதால் கீழே குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்த அந்தச் சிறுமியை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.