பரோல் கைதியை மருத்துவமனைக்குள் புகுந்து சுட்டுக்கொன்ற கும்பல்

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்த கொலை வழக்கு குற்றவாளி சந்தன் மிஸ்ரா மருத்துவ காரணங்களால் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சந்தன் மிஸ்ரா மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை 5 பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் புகுந்து சந்தன் மிஸ்ராவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். காயமடைந்த சந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாட்னா காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

சந்தன் மிஸ்ரா மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ள நிலையில், பழிக்குப் பழியாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News