Tuesday, July 15, 2025

ரஷ்யா இதை செய்யவில்லையென்றால் கடுமையான வரிகள் விதிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை

உக்ரைன் போரை 50 நாட்களில் முடிவுக்கு கொண்டு வராவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

புதினின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாக கூறிய டிரம்ப், அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைன் உடன் போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புக் கொள்ளாவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று கூறினார்.

2ம் கட்ட வரிகளை விதிக்க திட்டமிட்டு வருவதாகவும், தங்களுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டார். ஒரு பக்கம் அமைதியை விரும்புவதாக புதின் கூறிக் கொண்டே மறுபக்கம் உக்ரைன் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதாக டிரம்ப் விமர்சித்தார்.

புதின் மீது அதிருப்தி அதிகரித்து வருவதால், ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்கப்படலாம் என்று ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news