Saturday, July 5, 2025

கடன் பிரச்சனையால் உறவினர் வீட்டிற்கு தீ வைப்பு

பெங்களூருவில் கடன் பிரச்சனையால் உறவினர் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு விவேக் நகரில் இரு குடும்பத்தினர் இடையே பணம் சம்பந்தமான தகராறில் உறவினர் ஒருவர் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகராறு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வருவதாக கூறப்படுகிறது. வெங்கடரமணி மற்றும் அவரின் மகன் சதீஷ் ஆகியோருக்கு சொந்தமான வீட்டினை இவர்களின் உறவினரான சுப்பிரமணியன் என்பவர் தீவைத்து கொளுத்தினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news