சூடானில் கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்-ஃபீல் தங்கச் சுரங்கம் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு 38 தொழிலாளர்கள், 2023-ஆம் ஆண்டு 14 தொழிலாளர்கள் இதுபோன்ற சுரங்க விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். சூடானில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இத்தகைய சுரங்க விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதாக கூறப்படுகிறது.