Monday, June 30, 2025

தான்சானியாவில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து : 40 பேர் பலி

தான்சானியாவின் வடக்கு பகுதியில், சபாசபா என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பேருந்தின் டயர் பழுதானதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மற்றொரு பேருந்துடன் மோதியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news