அமெரிக்க நாடுகளில் ஒன்றான நெவாடாவில் உள்ள லாஸ் வெகாஸ் விமான நிலையத்தில் இருந்து வட கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு, 153 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அமெரிக்கன் ஏர்லைன் விமானம் புறப்பட்டது.
பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விமான இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு புகை வெளியேறியது. இதையடுத்து விமானி உடனடியாக விமானத்தை மீண்டும் லாஸ் வெகாஸ் விமான நிலையத்தில் தரையிறக்கி, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.