இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிலவிவரும் சூழலில் இரு நாடுகளிலும் வசிக்கும் தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
உதவி தொடர்பாக 011 24193300 (Land line) 9289516712 (Mobile Number with Whatsapp) என்ற எண்களை அழைக்கலாம்.