சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006-2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் எடுக்கப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.