மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி இன்று காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து கடையநல்லூர் அருகே மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென பேருந்து சக்கரத்தின் அச்சு முறிந்தது.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது. இதனால் பேருந்தின் பின்பகுதியில் இருந்த 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.