Wednesday, July 30, 2025

கர்நாடகாவில் அனைத்து வகையான பைக் டாக்சிகளுக்கு தடை

கர்நாடக மாநிலத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் ‘பைக் டாக்சி’ சேவையை வழங்கி வருகின்றன. இந்த பைக் டாக்சி சேவைக்கு கர்நாடக அரசின் போக்குவரத்துத்துறை தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக அந்தந்த நிறுவனங்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பைக் டாக்சிக்கு அரசு விதித்த தடை செல்லுபடியாகும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து வரும் 16ம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சி சேவை நிறுத்தப்பட உள்ளது.

கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரிய சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை பைக் டாக்சிக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News