Saturday, June 14, 2025

இந்தியா எடுத்த பயங்கரமான முடிவு! கதி கலங்கி கதறும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது?

இந்தியாவின் ஒரு முக்கியமான மற்றும் கடுமையான முடிவால், பாகிஸ்தான் இன்று மிக கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த புதிய பதிலடி – சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது.

1960-ல் உலக வங்கி முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் படி, பாகிஸ்தான் 70% சிந்து நதி நீரைப் பெறுகிறது. இந்த நீரின் மூலம், பாகிஸ்தான் நாட்டின் விவசாயம், குடிநீர், மின்சாரம் போன்ற முக்கிய தேவைகள் பூர்த்தியாகின்றன.

சுமார் 22 கோடி மக்கள் சிந்து நதியை நம்பி வாழ்கிறார்கள். ஆனால் இன்று, அந்த நம்பிக்கை முற்றிலும் சிக்கலுக்குள்ளாகி உள்ளது.

2025 ஜூன் இரண்டாம் வார நிலவரப்படி, பாகிஸ்தானில் 21% நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அணைகளுக்கு திறக்கப்படும் நீரளவிலும் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 144,000 கனஅடியாக இருந்த அளவு, இப்போது 124,500 கனஅடியாக குறைந்துவிட்டது.

மேலும், வெப்பநிலை 37 டிகிரிக்கு மேல் சென்று கொண்டிருக்கிறது. பலுசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களில் வெப்பஅலை நிலவுகிறது. இயல்பை விட 6 டிகிரி அதிக வெப்பநிலை இந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதிலே மோசமான விஷயம் என்னவென்றால், பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தான் தொடங்கும். அதுவரை, பாகிஸ்தான் முழுக்க தண்ணீர் இல்லாமல் வாடும் நிலை தொடரும்.

காரீப் பருவ சாகுபடி, தற்போது பருவத்தின் ஆரம்பத்தில் உள்ளதால், இந்நிலை விவசாயத்தை பெரிதும் பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய நீர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ.கே. பஜாஜ் கூறுவதுபோல், விவசாயிகள் கடும் நெருக்கடிக்குள்ளாகிறார்கள்.

இந்தியாவின் நீர் ஒப்பந்த ரத்தால், பாகிஸ்தான் இன்று தண்ணீர் இல்லா போரை எதிர்கொள்கிறது. இது உண்மையில் ஒரு நவீன யுத்தத்தின் ஒரு உந்துதலாகவே இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news