Saturday, June 14, 2025

சிங்கப்பூரின் தனியார் விமான நிறுவனம் அடுத்த மாதம் மூடப்படுவதாக அறிவிப்பு

சிங்கப்பூரின் தனியார் விமான நிறுவனம் அடுத்த மாதம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஜெட் ஸ்டார் ஆசியா என்ற தனியார் விமான நிறுவனம் இயங்கி வந்தது. ஆஸ்திரேலியாவின் குவான்டஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த இந்த நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக போதிய பயணிகள் இல்லாததால் நஷ்டத்தை சந்தித்தது.

இந்த நிலையில், ஜெட் ஸ்டார் ஆசியா விமான நிறுவனம், அடுத்த மாதம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news