Thursday, August 14, 2025
HTML tutorial

“என் சகோதரியை தூக்கில் போட வேண்டும்” – சோனம் ரகுவன்ஷியின் சகோதரர் பேட்டி

மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் அவரது மனைவி சோனம். இவர்கள் இருவரும் மேகாலயாவில் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, காதலன் மற்றும் கூலிப்படையுடன் இணைந்து ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் கொலை செய்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது சோனம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை மேகாலயா காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சோனம் ரகுவன்ஷியின் சகோதரர் கோவிந்த், இந்தூரில் உள்ள ராஜா ரகுவன்ஷி இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆதாரத்தின் அடிப்படையில் சோனம்தான் கொலையைச் செய்திருப்பார் என்று 100 சதவிகிதம் நம்புகிறேன்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ராஜ் குஷ்வாஹாவுடன் தொடர்புடையவர்கள். சோனம் ரகுவன்ஷியுடனான உறவை நாங்கள் முடித்துக்கொண்டோம். ராஜாவின் குடும்பத்திடம் மன்னிப்பு கோருகிறேன். சோனம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரை தூக்கில் போட வேண்டும் என கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News