பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகி சுனந்தா சர்மா, இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள வணிக வளாகத்தில் தனது சொகுசு காரை பார்க்கிங் செய்துள்ளார்.
திரும்பி வந்து பார்த்தபோது அவருடைய கார் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.1 லட்சத்திற்கும் மேல் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த திருட்டு சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என லண்டன் போலீசாருக்கு சுனந்தா சர்மா கோரிக்கை வைத்துள்ளார்.