திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனையில், அரசு பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்ட 28,000 லிட்டர் டீசல் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்களில் 6 பேரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து விசாரணை மண்டல போக்குவரத்து மேலாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
தற்போதைய சந்தை எண்ணெய் விலைப்படி, 28,000 லிட்டர் டீசலுக்கு மதிப்பு சுமார் ₹26 லட்சத்தி 440 ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.