ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த நாளும் வந்துவிட்டது. IPL வரலாற்றில் முதன்முறையாக கோப்பை வெல்லாத இரண்டு அணிகள் பைனலில் மோதுகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், மீண்டுமொருமுறை நேருக்கு நேர் மோதுகின்றன. Qualifier 1 போட்டியில் பெங்களூருவிடம் தோல்வி அடைந்த பஞ்சாப், மும்பையை அடித்து மீண்டும் பைனலுக்குள் Entry கொடுத்துள்ளது.
இதனால் இன்றைய ஆட்டம் உண்மையிலேயே கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்து தான். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று RCB வலிமையான அணியாகத் திகழ்கிறது. ஆனால் பஞ்சாப் பவுலர்களோ தொடர்ச்சியாக சொதப்பி வருகின்றனர். எனவே இன்றைய ஆட்டம் RCB பவுலர்களுக்கும், பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான ஒன்றாகத் தான் இருக்கும். குறிப்பாக Hazelwood – Shreyas இருவரில் யார் நன்றாக Perform செய்கிறார்களோ, அந்த அணியே வெற்றிக்கோப்பையை கையில் ஏந்திட வாய்ப்பு அதிகம்.
இந்தநிலையில் Chat GPT, Gemini, Grook ஆகிய 3 AI தளங்களும் IPL இறுதிப்போட்டியில், எந்த அணி வெற்றி பெறும்? என்று கணித்துள்ளன. 3 தளங்களுமே சொல்லி வைத்தது போல, பெங்களூரு அணியே கோப்பையை வெல்லும் என்று தெரிவித்து இருக்கின்றன. என்றாலும் இதுபோன்ற T20 தொடர்களில் அன்றைய நாளில் சிறப்பாக எந்த அணி விளையாடுகிறதோ, அந்த அணியே வெற்றிவாகை சூடும் என்பதால், இறுதிப்போட்டியின் முடிவினை நாம் ஒருவித ‘திக் திக்’ மனநிலையுடன் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.