சென்னையை அடுத்த பூந்தமல்லியில் சென்னை மற்றும் புறநகர் பகுதி மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்ட வருகின்றன. நாள்தோறும் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கும் பேருந்து நிலையம் வளாகத்தின் கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் பேருந்து நிலையத்தின் கட்டண கழிப்பிட கழிவு நீர் தேக்க தொட்டி நிரம்பி வழிகிறது. பேருந்து நிலைய வளாகத்தில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வழிந்தோடும் கழிவு நீர் அருகே இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதியில் பாய்ந்து செல்வதால் அங்கு இருக்கும் பொது மக்களுக்கும் நோய் தொற்று பரவும் சூழல் உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மட்டும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.