Saturday, August 2, 2025
HTML tutorial

”அந்த விஷயத்துல தப்பு பண்ணிட்டோம்” ‘வேதனையுடன்’ பேசிய ஷ்ரேயாஸ்

சண்டிகரில் நடைபெற்ற Qualifier 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி அதிர்ச்சி அளித்துள்ளது. தோல்வியை விடவும் 102 ரன்களுக்கு பஞ்சாப் சுருண்டது மிகுந்த விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தோல்விக்கான காரணம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர், ” குறைந்த ஸ்கோரை அடித்துவிட்டு பவுலர்கள் மீது பழிபோடக்கூடாது. சண்டிகரில் இன்று பவுன்ஸ் சீராக இல்லை.

சிலநேரம் அதிகமாக இருந்தது. சிலநேரம் குறைவாக இருந்தது. இதுதான் எங்களது தோல்விக்கு முக்கியக் காரணம். என்றாலும் இதனை ஒரு குறையாக கூறக்கூடாது. ஏனெனில் நாங்கள் சர்வதேச தரத்தில் ஆடக்கூடியவர்கள். இதை சரியாகக் கணித்து ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்க வேண்டும்.

அந்த விஷயத்தில் தப்பு செய்து விட்டோம்,” என்று மனந்திறந்து பேசியிருக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக தோல்வி அடைந்தாலும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்னுமொரு வாய்ப்பு உள்ளது. Eliminator போட்டியில் வென்று வரும் அணியுடன் மோதி வென்றால், மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News