இனிமேல் அமெரிக்காவில் இருந்து மொபைல் வாங்க முடியாது போலிருக்கிறது!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யுங்கள், இல்லையெனில் 25% வரி கட்ட வேண்டிய நிலை ஏற்படும்!” என்று அவர் நேரடியாக அறிவித்துள்ளார்.
ஆப்பிள், சாம்சங், மற்றும் பல நிறுவனங்கள் சீனா, இந்தியா போன்ற நாடுகளில் தங்களது முக்கியமான உற்பத்தியை செய்து வருகிறன. இதனால்தான் விலை கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் டிரம்ப்போ அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து மொபைல்களும், அதுவும் குறிப்பாக ஐபோன்கள், அமெரிக்காவுக்குள் விற்கப்படுமானால், குறைந்தது 25% வரி விதிக்கப்படும் என அவர் அதிரடியாக கூறியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, “அமெரிக்காவில் விற்கப்படும் மொபைல்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும், இல்லையெனில் வரி கட்ட தயாராக இருக்கணும்” என டிரம்ப் கூறுகிறார். இதனால், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து தயாராகும் மொபைல்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதில் பெரும் தடைகள் வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆப்பிளின் முக்கிய உற்பத்தி கூட்டாளியான Foxconn, இந்தியாவில் சென்னையில் \$1.5 பில்லியன் மதிப்பில் புதிய ஆலையை கட்டி, ஐபோன்களின் டிஸ்ப்ளே உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பு. ஆனால் அமெரிக்கா வருமான வரிகளை உயர்த்தினால், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்கள் அங்கே விற்கப்பட முடியாமலும், விலை அதிகமாகவும் போகும் அபாயம் உள்ளது.
அதாவது, அமெரிக்கா வர்த்தக ரீதியாக தனது மைதானத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில், மொபைல் வாங்குபவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். இந்த சூழலில், இனிமேல் “அமெரிக்காவில் இருந்து மொபைல் வாங்க முடியாது!” என்பதிலே ஒரு வகையில் உண்மை இருக்கலாம்!