மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லையா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 மாத உதவித்தொகை பெறாத பெண்கள், ஜூன் 4-ந்தேதி (2025) அன்று நடைபெறும் ‘மக்களுடன் முதல்வர்’ முகாமில் விண்ணப்பிக்கலாம்.

இந்த முகாமில், தகுதி வாய்ந்த பெண்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தமிழ்நாடு முழுவதும் 9,000 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. இதற்காக தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்தவர்கள், அருகிலுள்ள முகாம்களில் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது தாலுகா அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

Related News

Latest News