தகாத உறவில் இருந்த தாய் : கொலை செய்த மகன்

கர்நாடகாவில் தகாத உறவில் இருந்த தாயை, மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டத்தின் கஞ்சகரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவி. இவர் உறவினருடன் தகாத உறவில் இருந்ததை அறிந்து, மகாதேவியின் மகன் நாகராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது தாயை அடித்து கீழே தள்ளிய போது, அவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நாகராஜை கைது செய்தனர்.

Related News

Latest News