Sunday, June 1, 2025

பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி, அமித்ஷா பதவி விலக வேண்டும் – திருமாவளவன் பேச்சு

காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் தோல்வி என அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.

காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் கண் மூடித்தனமாக சுட்டதில் சுற்றுலா பயணிகள் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் தோல்வி தான் இந்த தீவிரவாத தாக்குதல் என அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், காஷ்மீரில் நடைபெற்ற கொடூரம் அதிர்ச்சி அளிக்கிறது. 370 பிரிவை அகற்றிவிட்டால் தீவிரவாதம் இருக்காது என பாஜக கூறி வந்தது. இதனையடுத்து 370 பிரிவு நீக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் செல்லலாம் என அறிவித்தார்.

இதனை நம்பி சென்ற பயணிகள் உயிரிழந்துள்ளனர். எனவே இதற்கு அமித்ஷா பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news