Sunday, June 1, 2025

இரட்டை இலைக்கு மேல் தாமரை மலர்ந்தே தீரும் – நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு

சேலம் ஓமலூர் பகுதியில் சேலம் பெருங்கோட்ட தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மாநில தலைவர் நைனா நாகேந்திரன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது : நம்மை எல்லாம் நம்பி அகில இந்திய தலைமை இந்த பொறுப்பை வழங்கியுள்ளது. இந்த பொறுப்பு என்று சொன்னால் தேர்தலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய அறிவுரையை தந்துள்ளனர்.

தலைமை சொன்ன வழியில் நாம் நடக்க வேண்டும் ஒவ்வொருவரும் கூட்டணி குறித்து விமர்சனங்கள் செய்து வருகின்றனர். நமது கூட்டணி உறுதியான கூட்டணி இறுதியான கூட்டணி என்பதையும் நீங்கள் யாரும் மறந்து விட வேண்டாம். தாமரை தமிழகத்தில் மலர்ந்தே தீரும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்.

இந்த கூட்டணி வெற்றி கூட்டணி. சாதாரண கூட்டணி அல்ல. முதலமைச்சர் கூறியுள்ளார் இது சந்தர்ப்பவாத கூட்டணி என்று. நீங்கள் தான் சந்தர்ப்பவாத கூட்டணியில் தலைமை ஏற்று உள்ளீர்கள். எங்களது கூட்டணி நியாயமான கூட்டணி, நேர்மையான கூட்டணி, ஊழல் அற்ற கூட்டணி என அவர் பேசியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news