ஆந்திராவில் உள்ள கியா கார் தொழிற்சாலையில் 900 கார் என்ஜின்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அந்த நிறுவனம் காவல்துறையை அணுகியது. இருப்பினும், முறையான புகார் இல்லாமல் முறையாக விசாரிக்க முடியாது என்று அதிகாரிகள் விளக்கியபோது, நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்தது.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.