Tuesday, August 19, 2025
HTML tutorial

டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டத்திற்கு திருமாவளவன் வரவேற்பு

தமிழ்நாடு அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் ரூ. 1000 கோடி வரையிலான ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பூதாகாரமாக வெடித்துள்ளது.

இதையடுத்து தமிழக பாஜக சார்பில் இன்று டாஸ்மாக் ஊழலை எதிர்த்து மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச். ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், டாஸ்மாக் விவகாரத்தை கண்டித்து பாஜக முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். “டாஸ்மாக்கிற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் வரவேற்போம். மதுபான கடைகளை ஒழிக்க வேண்டும், மூடப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு” என அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News