ஐரோப்பாவில் அமைந்துள்ள சிறிய நாடான லக்சம்பர்க், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டின் இளவரசர் பிரெட்ரிக், அரிய வகை நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதனை அவரது தந்தையும், இளவரசருமான ராபர்ட் உறுதிசெய்துள்ளார்.
மரபியல் நோய் காரணமாக மூளை, நரம்புகள், தசைகள், கல்லீரல் மற்றும் கண்களின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். பிரடெரிக் கடந்த 2022 ஆம் ஆண்டு, அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் அறக்கட்டளையை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.