Wednesday, March 12, 2025

இரவு நேரங்களில் NO HORN : தமிழக அரசு புதிய கட்டுப்பாடு

ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த வகையில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் இரவு நேரத்தில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், அமைதி மண்டலங்களில் இரவு நேரங்களில் ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Latest news