Monday, August 18, 2025
HTML tutorial

கோவில் சுவர் இடிந்து 9 பேர் பலி – நிவாரண தொகை அறிவித்த பிரதமர் மோடி

ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம கோவில் அமைந்துள்ளது. அதிகாலை தரிசனத்திற்கு வந்திருந்தனர். அப்போது காலை 2.30 மணியளவில் பெய்த பலத்த மழையால் கோவிலின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் . காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும். என தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News