ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. வடமேற்கு பிராந்தியமான போலோகோ நகரில் இந்த நோய் பாதிப்பு முதன்முதலாக கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்துக்குள் சுமார் 420 பேருக்கு இந்த காய்ச்சல் பரவியதில், 53 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த காய்ச்சல் குறித்து ஆராய்ந்து வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.