Monday, June 2, 2025

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…13 வயது சிறுவன் கைது

உத்தரபிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமியை 13 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் 5 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் அந்த சிறுமியை தனது இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news