Friday, February 13, 2026

டிஜிட்டல் கைது எனக்கூறி ரூ.84 லட்சம் பண மோசடி : 3 பேர் கைது

டிஜிட்டல் கைது என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலரும் தங்களது பணத்தை இழந்து ஏமாந்து வருகின்றனர். இந்நிலையில் டிஜிட்டல் கைது சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர்.

டிஜிட்டல் கைது மூலம் ஒரு பெண்ணிடம் ரூ. 84 லட்சத்தை மோசடி செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இது போல டிஜிட்டல் கைது எனக்கூறி பலரையும் ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related News

Latest News