வைரமுத்து மீது 17 பெண்கள் புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? பாடகி சின்மயி கோரிக்கை

172
Advertisement

கவிஞர் வைரமுத்து மீது 17க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் திமுக சார்பில் தொடர்ந்து வாய்ப்பு வழங்குவது ஏன்? என பாடகி சின்மயி டுவிட்டர் வாயிலாக முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

பாடகி சின்மயி வெளியிட்ட பதிவில்,

வைரமுத்துவிற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோருக்கு கோரிக்கை வைக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘பாலியல் குற்றச்சாட்டுகள் எழும்போது, ஒவ்வொரு முறையும் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள். இந்தியா முழுவதும் இதுபோல் பெண்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் பக்கம் நிற்கிறீர்கள்.

இதுபோல், அரசியல் கட்சித் தலைவர்கள் பேசும்போது மாற்றம் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.ஆனாலும், பாலியல் சுரண்டல்கள், தொல்லைகள் குறைந்தபாடில்லை.

போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் இருந்தும் அனைத்து துறையிலும் பாலியல் குற்றச்சாட்டு எழத்தான் செய்கிறது. குறிப்பாக திரைத்துறையில் இன்றும் பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

உங்கள் நண்பர் மற்றும் ஆதரவாளரான கவிஞர் வைரமுத்துவின் மீது 17 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் புகார் அளித்தும், உங்கள் அருகாமையில் அவர் மகிழ்ச்சியுடன்தான் இருக்கிறார். இதனால் அவர் குறித்து மேலும் பெண்கள் பேச முடியாதவாறு செய்கிறார்.

தமிழகத்தில் வேறு அரசியல்வாதிகளே இல்லை என்பதுபோல் அவரை தொடர்ந்து உங்கள் கட்சி முன்னிலைப்படுத்துகிறது. கிட்டத்தட்ட தமிழ் திரைத்துறையில் 5 ஆண்டுகள் வேலை செய்ய தடையுடன், நகரின் சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறேன்.

அதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்பது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.

இந்த நாட்டில் அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத ஒருவருக்கு நியாயம் கிடைக்க இத்தனை நாட்கள் ஆகும் போல.

நான் தேசிய பெண்கள் கவுன்சிலில் 2018-19-ம் ஆண்டுகளிலேயே புகார் அளித்துவிட்டேன். ஏனெனில் எங்களை போன்றவர்களுக்கு அது மட்டும்தான் ஒரே வழி.எழுத்துப்பூர்வமான புகாரை போலீஸ் அதிகாரிகளுக்கு அளித்தேன். அது வீட்டிற்கு புலனாய்வுக்கு வந்தது. என்னிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன.

சமாதானத்திற்காக அவர்கள் அழைத்தது, அவர்களின் போன் கால்கள் என போதிய ஆதாரங்களை வைத்துள்ளேன்.

அவரது மகன் மதன் கார்க்கிக்கும் குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவர் பதிலும் அளித்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அவரது தந்தையின் நடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரிஜ் பூஷணுக்கும், வைரமுத்துவுக்கும் விதிகள் வேறு கிடையாது. நமது நாட்டின் சாம்பியன்கள், மல்யுத்த வீரர்கள், நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள் பிரிஜ் பூஷணின் பெயரைக் கூறியுள்ளார்கள்.
அதேபோல தான் 17க்கும் மேற்பட்ட பெண்கள் வைரமுத்துவின் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.

உங்களுக்கும், உங்கள் கட்சிக்கு மிக நெருக்கமாக உள்ளவர். என்னையும் மற்றவர்களையும் அடக்க முயல்கிறார். பெண்களின் திறமைகள் மற்றும் கனவுகளை இதற்காக காவு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.