Friday, January 16, 2026

தந்தை திட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை ராமாபுரம் காந்திநகர் நான்காவது தெருவைச் சேர்ந்த பாஸ்கர் ஒரு தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது 16 வயதான மகள் சுபஸ்ரீ, ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு, தற்போது விடுமுறையில் வீட்டில் இருந்தார்.

சுபஸ்ரீ வீட்டில் எந்தவொரு வேலைக்கும் உதவவில்லை என்பதற்காக, அவரது தந்தை பாஸ்கர் பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஒருநாள் பாஸ்கர் டெலிவரி பணிக்காக வீட்டை விட்டு வெளியேறியபோது, சுபஸ்ரீ அவரது தாயுடன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அச்சமயத்தில் தாயார் குளிக்கச் சென்றபோது, சுபஸ்ரீ திடீரென ஒரு அதிர்ச்சிகரமான முடிவை எடுத்தார். தாயாரின் புடவையை பயன்படுத்தி, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் கிடைத்ததும், ராமாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுபஸ்ரீயின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சோகமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related News

Latest News