Saturday, June 28, 2025

நெதன்யாகுவிற்கு பெரிய சிக்கல்! அடுத்தடுத்த பாய்ந்த வழக்குகள்! நீதிமன்றம் கொடுத்த ஷாக்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.. ஒரு பக்கம் ஈரானும் ஹமாஸும் சேர்ந்து நடத்தும் போர்களுக்கு எதிராக போர்க்களத்தில் நிற்கிறார். ஆனால் இன்னொரு பக்கம், அவரை சுற்றி மூன்று பெரிய ஊழல் வழக்குகள் விரிந்துகொண்டே இருக்கின்றன. Case 1000, Case 2000, Case 4000 — இவை மூன்றும் இஸ்ரேலின் அரசியல் வரலாற்றிலேயே பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளாகத் திகழ்கின்றன.

முதலில் Case 1000 வழக்கைப் பார்ப்போம். பிரதமராக இருந்த காலத்தில், நெதன்யாகு தனது அதிகாரத்தை பயன்படுத்தி வெளிநாட்டுப் பணக்காரர்கள் மற்றும் ஹாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு விசா வசதிகள், அரசியல் ஆதரவுகள் போன்ற பல நன்மைகளை செய்துள்ளார். அதற்குப் பதிலாக அவர்களிடமிருந்து பணம், ஆபரணங்கள், சொகுசு பரிசுகள் போன்றவை பெற்றுள்ளார் என்பதே இந்த வழக்கின் குற்றச்சாட்டு.

அடுத்ததாக Case 2000. நெதன்யாகு ஊடகங்களில் தனது பெயரை நேர்மறையாக காட்ட வேண்டும் என்று சில ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். ஆதரவாக இருந்த ஊடகங்களுக்கு அரசியல் சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால் எதிராக இருந்த ஊடகங்களை அடக்க முயற்சி செய்ததற்காகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மூன்றாவது வழக்கு Case 4000. நெதன்யாகு தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, ஒரு தனியார் நிறுவனத்திற்கு அதிக சலுகைகள் வழங்கியுள்ளார். அதற்குப் பதிலாக அந்த நிறுவன ஊடகங்களில் தனக்கு ஆதரவான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் நேரடி பண பரிமாற்றங்களும் நடந்துள்ளன.

இந்த மூன்று வழக்குகளுக்கும் இடையில், நெதன்யாகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல், “நான் ஈரானுடன் போர் நடத்துகிறேன், பாதுகாப்பு விவகாரங்களில் நான் முக்கியமாக இருக்க வேண்டும்” என்று சொல்லி விசாரணையை தள்ளிக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். ஆனால் டெல் அவிவ் நீதிமன்றம் – “இது ஏற்க முடியாத கோரிக்கை. உடனே நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.” என்று மிகவும்  தெளிவாக கூறியிருக்கிறது

நீதிமன்ற உத்தரவும், ஊழல் வழக்குகளும், அரசியல் அழுத்தங்களும் — இவை எல்லாம் சேர்ந்து இப்போது நெதன்யாகுவிற்கு  மிகப்பெரிய சிக்கலை உருவாக்கியிருக்கின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news