தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் நாமக்கல்லைத் தொடர்ந்து கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். முதல்கட்ட தகவலில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதற்காக கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.